இதனை அடுத்து, நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானலுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறை மறுஉத்தரவு வரும் வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி ஆகியோர் வெளியிட்டுள்ள உத்தரவில், நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானலுக்கு பிற மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு கடந்த மே 7ஆம் தேதி முதல் இபாஸ் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், உயர்நீதிமன்ற மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இ-பாஸ் நடைமுறை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பிற மாவட்ட வாகனங்கள் www.epass.tnega.org என்ற இணையதளத்தின் மூலம் இ-பாஸ் பெறலாம் என்றும் ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளையில் கொடைக்கானலில் இ-பாஸ் பெற விண்ணப்பிப்பது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் உள்ளூர் வாகனங்களுக்கு உள்ளூர் இ-பா ஸ் (Local ePass) பெறுவது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களை 0451-2900233, 9442255737 என்ற எண்களில் தொடர்புகொண்டு பயன்பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…