முருக பெருமானின் ஜென்ம நட்சத்திரத்தை குறிப்பிடும் வைகாசி விசாக திருவிழா ஆண்டு தோறும் 10 நாட்கள் வசந்த விழாவாக கொண்டாடப்படும்.வைகாசி விசாகத்தை ஒட்டி முருகனின் அறுபடை வீடுகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அந்த வகையில் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஏராளமான பக்தர்கள் காவடி பால்குடம் சுமந்தும் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பல்வேறு ஊர்களில் இருந்து பாத யாத்திரையாக வந்த பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் வைகாசி விசாகத்தை ஒட்டி நள்ளிரவு ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாதுகாக்க வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடிய பிறகு காவடி பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முருகர் கோவில்களிளும் இன்று சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வைகாசி விசாகத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…