spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

தமிழ்நாட்டில் “இந்தியா” கூட்டணி அமோக வெற்றி என கணிப்பு 

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தமிழ்நாட்டில் “இந்தியா” கூட்டணி அமோக வெற்றி என கணிப்பு 

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என ஏபிபி செய்தி நிறுவனம், சி-வோட்டர் நடத்தியுள்ள புதிய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.

தமிழ்நாட்டில் "இந்தியா" கூட்டணி அமோக வெற்றி என கணிப்பு 

தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஏபிபி செய்தி நிறுவனம், சி-வோட்டர் நிறுவனத்துடன் இணைந்து நாடு முழுவதும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்தி உள்ளது.

இதில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக மற்றும் பாஜக கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என அந்த கருத்து கணிப்பின் மூலம் உறுதியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் "இந்தியா" கூட்டணி அமோக வெற்றி என கணிப்பு 

இந்த கருத்து கணிப்பின்படி தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 52 சதவீத வாக்குகளையும் அதிமுக கூட்டணி 23 சதவீத வாக்குகளையும் பெரும் என கணிக்கப்பட்டுள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் வெறும் 19 சதவீத வாக்குகளை மட்டுமே பெரும் எனவும் கருத்து கணிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த கருத்து கணிப்பின்படி தமிழ்நாட்டில் 39 தொகுதிகளையும் இந்தியா கூட்டணி கைப்பற்றும் பட்சத்தில் தேர்தலுக்குப் பிறகு மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக திமுக இடம்பெற கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல கேரளாவில் இந்தியா கூட்டணி மொத்தம் உள்ள 20 தொகுதிகளையும் கைப்பற்றும் என்ற ஏபிபி, சி-வோட்டர் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற இயலாது எனவும் கருத்து கணிப்பில் திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது.

https://www.mugavari.in/news/sports/mivscsk-ipl-match/1019

அதன்படி அங்கு இந்தியா கூட்டணி 43.4 சதவீத வாக்குகளையும் பாஜக கூட்டணி 21.2% வாக்குகளையும் பெரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

Video thumbnail
இசுலாமியர்களுக்கு துரோகம் போல, கிறித்துவர்களுக்கும் செய்ய தயாராகிவிட்டாரா பழனிசாமி? MKStalin
02:11
Video thumbnail
திருவொற்றியூரில் வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக MLA கே.பி.சங்கர்
01:26
Video thumbnail
உழவர்கரையில் மட்டும் விசிக போட்டி - விசிக தலைவர் திருமாவளவன்
02:46
Video thumbnail
"விஜயகாந்த்க்கு படம் நடித்து ஓட்டு கேட்டேன்… இப்போது மகனுக்காக நேரடியாக கேட்கிறேன்" DMK MKStalin
01:22
Video thumbnail
மோடிக்கு OPEN CHALLENGE.. -சங்கரன்கோவில் பரப்புரையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு..
01:56
Video thumbnail
பிரச்சாரத்தின் போது குழந்தைக்கு "அகில்யாழன்" என்று பெயர் சூட்டிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி
00:30
Video thumbnail
மதுரை மத்தி தொகுதியில் புதிய நீதிக்கட்சி வேட்பாளர் நடிகர் சுந்தர்.சி வேட்புமனு தாக்கல் செய்தார்
00:58
Video thumbnail
தேர்தல் நெருங்கிக்கிட்டு இருக்கு.. மக்களுக்கு என்ன சொல்றீங்க..? ரஜினிகாந்த் கொடுத்த ரியாக்ஷன்
00:46
Video thumbnail
தவெக மக்கள் பக்கம் நிற்கிறோம்; மக்கள் தவெக பக்கம் நிக்கிறாங்க - புதுச்சேரியில் விஜய் பேச்சு
14:36
Video thumbnail
விஜய்க்கு வேல் கொடுத்து வரவேற்ற தொண்டர்கள் #Puducherry #TVKVijay #TVK #Vijay
00:48
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img